வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா (09.09.2025) அன்றைய தினம் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது பருத்தித்துறை பிரதேச செயலாளரும் பண்பாட்டு பேரவை தலைவருமான திரு. ந. திருலிங்கநாதன் தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஸ்ட கலாசார
உத்தியோகத்தர் திருமதி.வி.சுகுணலினி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்கள் திரு.வெ.முத்துச்சாமி மற்றும் திரு.மு.ஜெகதேவன்
ஆகியோரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.





































