“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரத்தின் 2 ஆம் நாள் நிகழ்வு இன்று (28/07/2026) J/407 - புலோலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
நேர்மை நிறைந்த வினைத்திறன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பரிபூரணமான புதிய அரச சேவை யுகத்திற்கு அடிவைப்போம் என்ற கருப்பொருளில் செம்மையான அரச சேவைக்கான நேர்மை மிக்க டிஜிட்டல் அரச சேவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இதில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



















