தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
எதிர்வரும் 11.09.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ ஏற்பாட்டு கூட்டமானது 18/08/2026 இன்று எமது செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் திரு.ம.ப.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை மாவட்ட நீதி மன்ற பதிவாளர் ஆகியோரும் ஏனைய தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.