இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 வது சுதந்திர தின விழா இன்றைய தினம் (04 02.2023) யாழ் மாவட்டம் வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகமும் பருத்தித்துறை பிரதேச செயலகமும் 55 வது படையணியுடன் இணைந்து கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில்"நமோ நமோ தாயே நூற்றாண்டின் முதற் படி 2023-2048" எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு யா/ஹாட்லிக் கல்லூரி மற்றும் யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர மாணவர்களால் தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மற்றும் சர்வமதகுருமார்கள் ஆசியுரை வழங்கினர். பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்குப் பொதி வழங்கல் மற்றும் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், சர்வமதகுருமார்கள் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |































