2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரச அலுவலர்களின் உறுதி மொழி உத்தியோகத்தர்களால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் உரையுடன் விழா இனிதே நடைபெற்றது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















