756342548 3272183813169435 6053670270648093974 n

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரத்தின் 2 ஆம் நாள் நிகழ்வு இன்று (28/07/2026) J/407 - புலோலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
நேர்மை நிறைந்த வினைத்திறன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பரிபூரணமான புதிய அரச சேவை யுகத்திற்கு அடிவைப்போம் என்ற கருப்பொருளில் செம்மையான அரச சேவைக்கான நேர்மை மிக்க டிஜிட்டல் அரச சேவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இதில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரத் தொடக்க நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று எமது செயலகத்தில் நடைபெற்றது.
​ஜூலை 27 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியை "கிளீன் ஸ்ரீலங்கா - தேசிய நேர்மை வாரம்" என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
​இதன் ஒரு அங்கமாக, நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதலாம் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9:00 மணிக்கு செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
​நிகழ்வைத் தொடர்ந்து, எமது செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில்
​ஒரு அரச உத்தியோகத்தருக்கு இருக்க வேண்டிய பண்புகள், மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து போதை ஒழிப்பு உத்தியோகத்தரால் போதை பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
 

குடியுரிமை சாசனம்

Scroll To Top